பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
11:07
ராஜபாளையம்: தாமிரபரணி புஷ்கரணி விழிப்புணர்வு யாத்திரைக்காக வந்துள்ள தாமிரபரணி அம்மன், அகத்திய முனி விக்ரகம் மற்றும் துறவியர்களுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீ தாமிரபரணி மஹாபுஷ்கரணி விழா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தாமிரபரணி அன்னை, அகத்திய முனிவருக்கு திருவுருவச் சிலை செய்து, கடந்த ஜூலை 11 ம் தேதி சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீட ஸ்ரீஸ்ரீ சங்கராச்சார்ய மகா சுவாமிகள் வழிபாட்டுடன் யாத்திரையை துவக்கி வைத்தார்.
இந்த யாத்திரை ஒசூர், திண்டுக்கல், மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக நேற்று ராஜபாளையம் வந்தடைந்தது. யாத்திரைக்கு பக்தர்கள் ஊர்வலத்துடன் பஞ்சு மார்க்கெட்டிலிருந்து பஜனை பாடியபடி அழைத்து சென்றனர். ஏ.எஸ். வேலாயுதராஜா வேதாந்த பாடசாலை, ராஜூக்கள் பெரிய சாவடி ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமிகளின் ருவச் சிலைகளை தரிசித்து திருவாசகம் முற்றோதல், விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்தனர். யாத்திரை ஜூலை 20 ல் பாபநாசத்தில் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகள்அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.