திருநெல்வேலி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி நதியில் அக்., 11 ல் துவங்கிய மகாபுஷ்கர விழா இன்று நிறைவுபெறுகிறது.---திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துவங்கும் தாமிரபரணி நதி 130 கி.மீ., பாய்ந்து துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. மகா புஷ்கர விழாவை முன்னிட்டு படித்துறைகளிலும், தீர்த்தக்கட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.
மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பாபநாசம், முறப்பநாடு பகுதியில் அதிக எண்ணிக்கையில் நீராடுகின்றனர்.அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நீராடினர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாபநாசத்திலும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குறுக்குத்துறையிலும் நீராடினர். இன்றுடன் மகாபுஷ்கரம் நிறைவடைகிறது.திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்கிறது. இதனால் நேற்று தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்தது. கரை ஓரத்தில் மட்டும் நீராட போலீசார், தீயணைப்பு படையினர் அறிவுறுத்தினர்.கோயில்களில் கூட்டம்புஷ்கரத்தின் 12 நாட்களும் நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. திருநெல்வேலி அல்வா கடைகளிலும் நீண்டவரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். கிருஷ்ணாபுரம், திருச்செந்துார், குலசேகரபட்டினம் போன்ற சுற்றுலா சார்ந்த கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர்.புஷ்கர விழாவால் வணிகர்கள், ஆட்டோ, வாடகை வாகன ஓட்டுனர்கள் உற்சாகம் அடைந்தனர்.