பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள தட்ஷிண சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று (டிசம்., 6ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன.
வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று (டிசம்., 6ல்) காலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கின. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாய் பாபாவை தரிசனம் செய்தனர்.மதியம் உச்சிபூஜையும், மாலை சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று (டிசம்., 6ல்) காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.