Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆழ்வார் ... திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பில் மாற்றம் திருப்பரங்குன்றம் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு

பதிவு செய்த நாள்

14 டிச
2018
11:12

சபரிமலை: சபரிமலையில், வரும், 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, தங்க அங்கி பவனி, 23-ம் தேதி காலையில் புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், தொடர்ச்சியாக, 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு நாளில், மண்டல பூஜை கொண்டாடப்படும்.வழிபாடு இந்த ஆண்டு மண்டல பூஜை, 27-ம் தேதி நடைபெறுகிறது. 1973-ல், திருவிதாங்கூர் மன்னர், சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி, மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டல பூஜையன்றும், மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்.

கேரளா, பத்தணந்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டு உள்ள இந்த அங்கி, மண்டல பூஜைக்கு, நான்கு நாட்கள் முன்னதாக, பவனியாக எடுத்து வரப்படும். சபரிமலை போன்று வடிவமைக்கப்பட்ட ரதத்தில், அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களால் வழிபாடு செய்யப்படும். இந்த ஆண்டு, வரும், 23-ம் தேதி காலை, 6:30 மணிக்கு, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து, பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. 23-ல், ஓமல்லுார் பகவதி கோவிலில்; 24- - கோந்நி முருங்கமங்கலம் கோவில்; 25- - பெருநாடு சாஸ்தா கோவிலில் தங்கும் இந்த பவனி, 26-ம் தேதி மதியம், பம்பை வந்தடையும்.

தீபாராதனை: அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மூலவருக்கு, மாலை 6:30 மணிக்கு, தங்கஅங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள், 27 இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப் படும். மகரவிளக்கு கால பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. 31ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் துவங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar