பதிவு செய்த நாள்
22
ஜன
2019
02:01
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த தைப்பூச தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதம் முதல், பங்குனி வரை, ஆறு, குளங்களில், ஒவ்வொரு மாதமும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, தை மாதம் பூச நட்சத்திரமான நேற்று, ஈசான்ய குளத்தில், சூல வடிவில் அருணாசலேஸ்வரர் மூழ்கி, பகல், 12:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு, அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, தீர்த்தவாரி முடிந்த நிலையில், வள்ளாள மஹாராஜா போரில் இறந்த செய்தி, அருணாசலேஸ்வரருக்கு தகவல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, இதைக் கேட்டு, மேள, தாளம் முழங்காமல், குளக்கரையில் இருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.