அழகர்கோவில் தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2019 11:02
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மாசி பவுர்ணமியையொட்டி தெப்பத் திருவிழா நடந்தது.
மாசி திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் கஜேந்திர மோட்ச உற்ஸவம் நடந்தது. நேற்று கோயிலிலிருந்து வர்ண குடைகள் மற்றும் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், யானை சுந்தரவள்ளி முன் செல்ல ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் புறப்பாடானார். பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் வறட்சியால் தண்ணீர் இல்லாததால் குளக்கரையை மட்டும் பெருமாள் சுற்றி வந்து கிழக்குபகுதி மண்டபத்தில் எழுந்தருளினார்.
பெருமாள், தேவியருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததாலும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாததாலும் கூட்டம் குறைவாக இருந்தது. மாலையில் பெருமாள் கோயிலுக்கு திரும்பினார். தக்கார் வெங்கடாசலம்,நிர்வாக அதிகாரி மாரிமுத்து, வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜ பாண்டிய புலிகேசி மற்றும் பலர் பங்கேற்றனர்.