பழநியில் சண்முகா நதியை சீரமைக்க காவடியுடன் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2019 01:06
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சண்முகா நதி உருவாகிறது. இந்த ஆறு வடக்கு நோக்கி மானூர், அக்கரைப்பட்டி, கீரனூர், அலங்கியம் ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும், தாராபுரத்திற்கும் இடையே காவிரியின் துணை ஆறான அமராவதி ஆற்றோடு கலக்கிறது.
புனிதமிக்க சண்முக நதியில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து மாசடைந்துள்ளது. மாசடைந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. எனவே, இந்த நதியை சீரமைக்க கோரி இந்து தமிழர் கட்சியினர் காவடி ஏந்தி திண்டுக்கல் கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மாநில குழு உறுப்பினர் மனோஜ்குமார் கூறும்போது, தைப்பூசம், பங்குனி உத்திரத்தின்போது பழனி ஆண்டவர் முத்துக்குமாரசுவாமி தீர்த்தவாரி உற்சவம் இந்த சண்முகநதியில்தான் நடைபெறும். தற்போது அது நடைபெறுவதில்லை. அதை மீண்டும் நடத்துவதற்கு ஏற்ப நீர்நிலையை தூய்மைப்படுத்த வேண்டும், என்றார்.