தொழிலாளி இறுதி வரைக்கும் முதலாளியிடம் உண்மையாய் இருக்க வேண்டும் என்பதற்கு பைபிளில், “நீ மரண பரியந்தம் (இறக்கும் வரை) உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை (வாழ்வின் உயரிய பொருள்) உனக்கு தருவேன்” என்ற வசனம் உள்ளது. ஸ்காட்லாந்து எடின்பர்க் நகரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவரது நாய் அவர் மீது அன்பு வைத்திருந்தது. எங்கு அவர் சென்றாலும் நாயும் செல்லும். ஒருநாள் விவசாயி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த இடத்தில் கல்லறை கட்டப்பட்டது. கல்லறை அருகே நாய் படுத்துக் கொண்டது. அதை விட்டு நகரவே இல்லை. யாராவது எதையாவது கொடுத்தால் சாப்பிடும். இப்படியே 12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் நாயும் கல்லறை மீது இறந்து கிடந்தது. தனது முதலாளி மீது கொண்டிருந்த அன்பைப் பாருங்கள். நாய்க்கு இருக்கும் விசுவாசம், மனிதனுக்கு இருக்க வேண்டாமா! அவன் தனக்கு உணவளித்த முதலாளியிடம் எந்தளவுக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்பது புரிகிறதா!