ஆலயத்துக்கு சென்றால் நம் கவனம் போதகரின் பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் சிலர் அதைக் கவனிப்பதில்லை. பக்கத்தில் இருப்பவரிடம் பேசியபடி இருக்கின்றனர். சிலர் தூங்கி வழிகிறார்கள். ஆர்வமில்லாத சிலருக்கு பிரசங்கம் போரடிக்கிறது. யார் பிரசங்கத்தை உண்மையுடன் கேட்கிறாரோ, அவர்களின் மனதை கர்த்தர் குளிரச் செய்வார்.
“கர்த்தரே! என்னோடு கூட பேசும். உம்முடைய ஞானமான ஆலோசனைகளை எனக்குத் தாரும். உம்மை எண்ணும் என் இருதயம் குளிர வகை செய்யும்” என்று மனம் ஒன்றி ஜெபியுங்கள். அவரிடம் உங்கள் பாரங்களை இறக்கி வையுங்கள். கேட்டது எப்போது கிடைக்கும்? ஒருவர் பரலோகத்திற்கு சென்ற போது, அங்கு அரண்மனை போன்ற வீடுகளை கண்டார். அதில் நிறைய அட்டைப்பெட்டிகள் இருந்தன. வண்ணத் தாள்களால் சுற்றப்பட்டு, ரிப்பனால் கட்டி வைத்திருந்தனர். அவற்றின் மீது லேபிள் ஒட்டப்பட்டு பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கிருந்த தேவதூதரிடம், “தூதரே! இந்த பெட்டிகளில் எல்லாம் பெயர் எழுதப்பட்டு தயாராக இருந்தும், ஏன் சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பப் படாமல் இருக்கின்றன?” எனக்கேட்டார் அவர்.அதற்கு, “இந்த உலகிலுள்ள மக்களுக்கு கொடுப்பதற் காகவே இந்த பெட்டிகள் உள்ளன. ஆனால் ஒரு சாரார் கடவுளை நோக்கி ஜெபம் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு இந்த பெட்டிக்குள் இருக்கும் நற்பலன்கள் கிடைக்காமல்போகிறது. மற்றொரு சாரார் ஜெபித்தாலும் சுயநலத்துடன் தங்களின் ஆசைகளை நிறைவேற்றும்படி மட்டும் ஜெபிக் கிறார்கள். எனவே அவர்களுக்கும் அனுப்ப முடியவில்லை” என்றார். தேவதூதர் சொல்வது போல பொதுநலத்துடன் பிரார்த்தனை செய்யும் போது தான் நாம் கேட்டது கிடைக்கும்.