Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமல்லபுரத்தில் கோவில் அர்ச்சகர் ... மலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா மலைவாழ் மக்கள் மனதில் வாழும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணலூர்பேட்டையில் சுவாமி சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
மணலூர்பேட்டையில் சுவாமி சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

20 நவ
2019
05:11

திருக்கோவிலூர்: மணலூர்பேட்டையில் சாலை விரிவாக்க பணியின் போது சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில், ஆஞ்சநேயர் கோயில் அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையின் குறுக்கே இருந்த பழைய கல்வெட்டை அகற்றி அகலப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது.

இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெ.சி.பி., மூலம் பழைய கல்வெட்டு இடிக்கப்பட்டது. அதிலிருந்த கற்பலகைகளை அருகிலிருந்த பூந்தோட்டத்தில் குவித்து வைத்திருந்தனர். கற்குவியல் பலகைகளின் இடையில் புடைப்பு சிற்பங்களுடன் கூடிய பலகை ஒன்று இருந்ததை நேற்று அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர். இதனை சுத்தம் செய்து பார்த்தபோது, ஒரு கையில் மானும் மற்றொரு கையில் தீச்சட்டி ஏந்திய ஒவரின் தலையில் கையும், மற்றொரு கையில் உடுக்கையும், கத்தியும் இருந்தது. இது துர்க்கை, பிச்சாடனர் அல்லது அங்காளமூர்த்தி சுவாமியாக இருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் யூகிக்கின்றனர். சுவாமி சிலை கிடைத்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சிலைக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாலை அணிவித்து வழிபடத் தொடங்கினார்கள்.


மிகவும் பழமையான புடைப்புச் சிற்பம் என்பதை ஒரு தரப்பினர் முழுமையாக உறுதி செய்தாலும், இது எந்த சுவாமி, எந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் அப்பகுதியில் உள்ள கோயில்கள், கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களின் முழு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்கின்றனர் விவரம் அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar