காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவிலில் யாகசாலை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2019 10:11
திருச்சி: ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில், கும்பாபிஷேகத்துக்காக, கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து, யாகசாலை பூஜைகாக, யானை மீது வைத்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. மங்கல வாத்தியத்துடன் சித்திரை வீதிகள் வழியாக, புனித நீர் யாகசாலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் துவங்கின. 29 மற்றும் 30ம் தேதி பல்வேறு பூஜைகள் நடத்தி, டிசம்பர் 1ம் தேதி காலை 8:45 மணிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.