ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 78.93 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 32 நாட்களுக்கு பிறகு நேற்று கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதியில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். பின் காணிக்கைகளை கோயில் கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், கண்ணன் மற்றும் ஊழியர்கள் பலர் எண்ணினர். இதில் ரொக்க பணம் 78 லட்சத்து 93 ஆயிரத்து 23 ரூபாயும், தங்கம் 104 கிராம், வெள்ளி 1 கிலோ 865 கிராம் காணிக்கையாக கிடைத்தது.