Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு ... மவுனகுரு சுவாமி கோவிலில் நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மூக்குபொடி சித்தர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2019
01:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த, மூக்குபொடி சித்தர் முதலாமாண்டு குருபூஜை விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்தவர் மூக்குபொடி சித்தர்; இவர், அருணாசலேஸ்வரர் ஈர்ப்பால், 1984ல், திருவண்ணாமலை வந்தார். கோவில் புரவி மண்டபம், சிவகங்கை தீர்த்தக்குளம் பகுதியில் தங்கி, நீண்ட நாட்களாக மூக்குபொடி போட்டவாறு தியானத்தில் ஈடுபட்டார். பக்தர்கள் அவரை சித்தராக வழிபட தொடங்கினர். அவரிடம் ஆசி வாங்க வரும் பக்தர்கள், மூக்குபொடியை காணிக்கையாக செலுத்தினர். கிரிவலப்பாதையில், திருநேர் அண்ணாமலை, ஆகாஷ் ஓட்டல், தேரடி வீதி பூபதி டீ கடை, பகுதிகளில் அவர் விரும்பிய நாட்கள் வரை, அங்கேயே தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இறுதியாக, சஷோத்திரி ஆஸ்ரமத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு அங்கு, சித்தி அடைந்தார். அவரை வாயுலிங்கம் அருகே அடக்கம் செய்தனர். அன்று முதல், அவரது சமாதிக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று, அவரது சாமாதியில், சாதுக்களுக்கு வஸ்திர தானம், பணம், அறுசுவை உணவு வழங்கி, முதலாமாண்டு குருபூஜை நடந்தது. மூக்குபொடி சித்தர் ஆஸ்ரம ஆலோசகர் முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி துரை செய்திருந்தார். குருபூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar