பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ம் ஆண்டு சம்பகசஷ்டி விழா துவங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திவிநாயகர் சன்னதியில் நவ. 26 அன்று மாலை 6:30 மணிக்கு அனுக்ஞையுடன்விழா தொடங்கியது. நவ.27ல் துவங்கி தினமும் பைவரவருக்கு ேஹாமம்,அபிஷேகம் நடத்தப்பட்டு, விபூதி காப்பு, பச்சை, சிகப்பு, வெள்ளை, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் சுவாமிஎழுந்தருளினார். டிச.2 ல் காலை 6:00 மணிமுதல்12:30 மணிக்குள் ஓம் அதி சந்துஷ்ட பைரவ யாகம் நடக்கிறது. மறுநாள்அஷ்ட வித்யார்ச்சனை, புஷ்பாஞ்சலியும், டிச., 3 ல் பாவாடை நைவேத்தியம்,வெள்ளிக்கவசம் சாத்தப்படும். மதியம் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை, அறங்காவலர்கள் மற்றும் பைரவர்அஷ்டமி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.