கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ; சகுனம் கேட்டல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 10:03
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
கோவில் குண்டம் தேர் திருவிழா வருகிற 31 ம் தேதி காலை நடைப்பெறுகிறது. தொடர்ந்து அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. கோவில் குண்டம் மற்றும் தேரோட்டம் நடத்துவதிற்கான சகுனம் கேட்டல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள சகுனம் விநாயகர் கோவிலில் சிறப்பு நடத்தப்பட்டு, சகுனம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருகிற 20 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தேர் முகூர்த்த கால் நடல், 25 ம் தேதி இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.