வால்பாறையில் இருந்து பழநிக்கு கொண்டு சென்று முருகர் சிலைக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 04:03
வால்பாறை: வால்பாறையில் இருந்து ஆறு முகம் கொண்ட முருகர் சிலை, பழநி கோவிலுக்கு கொண்டு சென்று பூஜிக்கப்பட்டது.
வால்பாறை அண்ணா நகர் பழநி பாதயாத்திரை குழுவின், 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, முருகபக்தர்கள் சார்பில், 2 லட்சத்து, 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஆறுமுகம் கொண்ட முருகன் சிலை கொண்டு வரப்பட்டது. அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் முருகர் சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், முருகர் சிலையை அலங்கரிக்கப்பட்ட தேரில் பழநிக்கு யாத்திரையாக கொண்டு சென்றார். பழநி பாதயாத்திரை குழுவினர் கூறுகையில், ‘அண்ணாநகர் பழநி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில், ஆறு முகம் கொண்ட முருகர் சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பழநி மலைக்கோவிலில், ஆசி பெற முருகர் சிலையை யாத்திரையாக பழநி கொண்டு சென்றனர். இன்று(12ம் தேதி) காலை பழநி முருகனிடம் ஆசி பெற்ற பின், வால்பாறை அண்ணாநகர் மாரியம்மன் கோவிலில் முருகப்பெருமான் சிலை கும்பாபிேஷக நாளில் பிரதிஷ்டை செய்யப்படும்,’ என்றனர்.