Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி கரையில் ... விருதுநகரில் சவேரியார் ஆலய விழா துவங்கியது டிச., 7ல் தேர் பவனி விருதுநகரில் சவேரியார் ஆலய விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானி கோயில் யானை மரணம்
எழுத்தின் அளவு:
பவானி கோயில் யானை மரணம்

பதிவு செய்த நாள்

30 நவ
2019
01:11

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், 39 ஆண்டுகள் ஆசி வழங்கி வந்த பெண் யானை வேதநாயகி, நோயுடன் போராடிய நிலையில், நேற்று (நவம்., 29ல்) அதிகாலை இறந்தது. ஆயிரக்கணக்கான மக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு, 1980ல், மூன்றரை வயதான வேத நாயகி யானையை, ஊர் மக்கள் வாங்கி கொடுத்தனர். 2015ல், யானைக்கு, முதல் முறையாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர் குழுவின் தொடர் சிகிச்சையால், சிறிது உடல் நலம் தேறியது.

கடந்த, 10 நாட்களாக, வாய் மற்றும் கழுத்து, வலது முன்னங்கால் பகுதியில் நீர்க்கட்டு, வீக்கத்தால், எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. இதையடுத்து, யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று, உயரிய சிகிச்சை அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

விசாரித்த உயர் நீதிமன்றம், ‘யானைக்கு, மாவட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, வன உயிரின காப்பாளர், கால்நடை டாக்டர்கள் உரிய சிகிச்சை வழங்க வேண்டும்’ என நேற்று முன்தினம் (நவம்., 28ல்) உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று (நவம்., 29ல்) அதிகாலை 5:10 மணியளவில், வேதநாயகி யானை இறந்தது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், யானை உடலுக்கு அஞ்சலி செலுத்த, கண்ணீருடன் குவிந்தனர். கூடுதுறை சங்கமேஸ்வர் கோயில் கதவு பூட்டப்பட்டது.

பகல் 1:40 மணியளவில், பொக்லைன், இயந்திரத்தின் உதவியால், யானை உடல், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கூடுதுறை கோவில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar