பதிவு செய்த நாள்
30
நவ
2019
01:11
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 29ல்) மாலை 6:00 மணிக்கு மறை வட்ட அதிபரும் புனித இன்னாசியார் ஆலய பாதிரியாரான பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், பாண்டியன்நகர் பாதிரியார்கள் மரியசெல்வன், ஜெயராஜ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு திருப் பலி, மறையுரை நடந்தது. தினசரி மாலை ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மறை யுரை, 9ம் நாளான டிச., 7 மாலை 6:00 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி, மரையுரை, தூய சவேரியார், தூய லூர்து அன்னை, மிக்கேல் அதிநாதர் உலா வரும் தேர் பவனி நடக்கிறது.
10ம் நாளான டிச., 8 மாலை 6:00 மணிக்கு செம்பட்டி இளங்குருமட அதிபர் ஜெயந்தன் தலை மையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதை தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப் பட்டு திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.