பதிவு செய்த நாள்
07
டிச
2019
02:12
கடலுார்: சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது.சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் எனும் ஆகாச சாஸ்தா கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு வரும் 13ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால பூஜைகள் நடக்கிறது. 14ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடக்கிறது. 15ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, மூலமந்திர ஹோமம், 10:00 மணிக்கு பரிவார யாக சாலை பூர்ணாகுதி, 11:05 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 11:20 மணிக்கு கும்பாபிஷேகம், 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
விழாவில், அமைச்சர் சம்பத் தந்தை மேல்குமாரமங்கலம் சின்னசாமி குடும்பத்தினர், அமைச் சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலை வகிக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.