ராசிபுரம் கார்த்திகை தீப விழா: திருக்கோடி வைக்க அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2019 02:12
ராசிபுரம்: நைனாமலை பெருமாள் கோவிலில் கார்த்திகை தீப திருக்கோடி வைக்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி, நைனாமலை பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமைதோறும் திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது.
வரும், 7ல் வரதாஜ பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை மற்றும் திருமஞ்சன திருக்கோடி உள்ளிட்டவை நடக்க வுள்ளன. மறுநாள் அடிவார பாதம், ஆஞ்சநேயர், மலைக்காவலையன் கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில், அனைத்து பக்தர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, ராசிபுரம் வாசவி எஜூகேஷனல் அண்ட் சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.