குளித்தலை அருகே குள்ளாயியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2019 02:12
குளித்தலை: குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணம் பஞ்., எரிச்சலூரில் குள்ளாயியம்மன் கோவில் புதியதாக புனரமைக்கப்பட்டது. இந்த கோவில் பஞ்..க்குட்பட்ட, 13 கிராம பொது மக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது. வரும், 8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, கிராம மக்கள் குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.