Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவை.,கள்ளபிரான் கோயில் சித்திரை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5 தலை ராஜநாகலட்சுமி ஸ்வாமி சிலை ஜலாதிவாசம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2012
10:04

மோகனூர்: மோகனூர் அருகே, 16 அடி உயரத்தில் ஐந்து தலையுடன் அமைந்துள்ள ராஜநாகலட்சுமி ஸ்வாமிக்கு ஜலாதிவாசம் கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் யூனியன், ராசிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி கோவில் உள்ளது. ராகு, கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், 16 அடி உயரத்தில், ஐந்து தலையுடன் கூடிய ராஜநாகலட்சுமி ஸ்வாமி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பக்தர்கள் வழங்கிய நன்கொடையை கொண்டு சுசீந்திரம் பகுதியில் இருந்து கருங்கல் வெட்டி எடுத்துவரப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன் சிலை வடிவமைக்கும் பணி துவங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். முன்னதாக, 16 அடி உயரத்தில் ஐந்து தலையுடன் கூடிய ராஜநாகலட்சுமி ஸ்வாமிக்கு ஜலாதி, தான்யாதி, சந்தனாதி வாச பிரவேசம் மற்றும் பிரதிஷ்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள், காலை 8 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். மதியம் 1.30 மணியளவில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்ட மெகா தொட்டியில் ஸ்வாமியை இறக்கி ஜலாதிவாசம் செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். தொடர்ந்து, 41 நாட்கள் ஜலாதிவாசம் செய்யும் ஸ்வாமிக்கு, மே 31ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், தான்யாதிவாசம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, எட்டு நாட்களுக்கு பின், ஜூன் 8ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சந்தனாதி வாசம் செய்யப்படுகிறது. ஜூன் 25ம் தேதி பகல் 12 மணிக்கு 16 அடி ஐந்து தலை ராஜநாகலட்சுமி ஸ்வாமி நிலை நிறுத்தலும், அஷ்டபந்தன பிரதிஷ்டையும் நடக்கிறது. ஜூலை 2ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar