உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கார்த்திகை விழா வரும் 10ம் தேதி நடக்கிறது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், திருக்கார்த்திகை விழா, பிரசன்ன விநாயகர் கோவிலில் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகை விழா மன்றத்தினர் செய்து வருகின்றனர்.