Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் கோயில்களில் அனுமன் ... ஊத்துக்காடு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஊத்துக்காடு அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 டிச
2019
02:12

பொள்ளாச்சி: ராம பிரானின் ஆஸ்தான பக்தரான அனுமன், மார்கழி மூல நட்சத்திரம், தனுசு ராசி, அமாவாசை திதியில் அவதரித்தவர். அந்நாளில், பக்தர்கள் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடுகின்றனர்.நேற்று 25ல், பெருமாள் கோவில்களில், ஆஞ்சநேயர் சன்னதிகளில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பொள்ளாச்சி, கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவில், பாலக்காடு  ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட  கோவில்களில், ஆஞ்சநேயருக்கு பலவகை திரவியங்களால் அபிஷேகம்  செய்யப்பட்டது.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை, வடை மாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை அணிவித்தும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் குடும்பத் துடன் திரளாக பங்கேற்று, ஆஞ்சநேயரை  தரிசனம் செய்தனர்.

* நெகமம் அருகே, காட்டம்பட்டிபுதுாரில், 450 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி,  பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.மார்கழி மாத  அதிகாலை பூஜையை தொடர்ந்து, அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நேற்று  25ம் தேதி நடந்தது. வாலில் மணி கட்டிய ஆஞ்நேயருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை, வடை மாலை சாற்றுதல் மற்றும் ஆஞ்சநேயரை போற்றி பஜனை நடந்தது.

இதேபோல், நஞ்சேகவுண்டன்புதுார் வாய்க்கால் மேடு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதியில்,  ஆஞ்சநேயர் பிறந்த நாளான நேற்று 25ம் தேதி அபிஷேக பூஜையும், சிறப்பு  அலங்காரபூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பக்திபாடல்களை பாடினர்.இதே  போல், வால்பாறை அண்ணாநகர் ராமர்கோவிலில் எழுந்தருளியுள்ள  ஆஞ்சநேயருக்கும், சோலையார் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள  ஆஞ்சநேயருக்கும், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar