Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சியில் வைகுண்ட ஏகாதசி ... ஈரோடு கோவில்களில் அன்னதானம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 207 கண்காணிப்பு கேமரா அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2019
02:12

திருச்சி: ”ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு பணிக்கு, 207  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,” என்று திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனர் வரதராஜ் தெரிவித்தார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, இன்று 26ம் தேதி   துவங்கி, வரும் ஜனவரி, 5ம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், ஜனவரி,  6ம் தேதி முதல், 16ம் தேதி வரை ராப்பத்து விழாவாகவும் நடக்கிறது. முக்கிய  நிகழ்வான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு, ஜனவரி, 6 அதிகாலை,  4:45 மணிக்கு நடக்கிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்வர் என்பதால்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. நேற்று, ஸ்ரீரங்கத்தில்  புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

அதை திறந்த வைத்த, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜ்  நிருபர்களிடம் கூறியதா வது: பொதுமக்கள் பாதுகாப்புக்காக கோவிலின்  உட்புறத்தில் முக்கிய இடங்களில், 117 கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன. நான்கு உத்திர வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள்  மற்றும் 24 கேமராக்கள் என, பாதுகாப்பு பணிக்காக புதிதாக, 207 கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன் அருகே கண்காணிப்பு  கேமராக் களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. பக்தர்களின்  வசதிக்காக, 21 இடங்களில் பெரிய எல்.இ.டி., - எல்.சி.டி., ’டிவி’க்கள், 73  இடங்களில் ஒலி பெருக்கிகள் பொருத்தப் பட்டுள்ளன.

பக்தர்கள் தங்களின்  வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை  வீதி, நெடுந்தெரு மந்தை, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி என, ஒன்பது இடங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றிலும், 12 ஆம்புலன்ஸ்கள்  நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar