பதிவு செய்த நாள்
27
டிச
2019
12:12
பல்லடம்: பஞ்ச பூதங்களால் ஆன மண் விளக்கு கொண்டு, தீபம் ஏற்றுங்கள் என, மார்கழி உற்சவ விழாவில், காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தினார்.பல்லடம், ஸ்ரீசத்யசாயி சேவா சமிதியின் சார்பில், மார்கழி ஆன்மீக உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது.ஸ்ரீசத்யசாயி சேவா சமிதியின் கன்வீனர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினரின், சாய் பஜனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி பேசியதாவது:பஞ்ச பூத சக்திகள் கோவில்களில் உண்டு. உள்ளத்திலும், இல்லத்திலும் இறைவன் இருந்தால் தீங்கு நேராது. தமிழகத்தில்தான் தர்மம் பிறந்தது. ராமாயணம், மகாபாரதம் எங்கு ஒலிக்கின்றதோ, அங்கு இறைவன் இருப்பான் என்கிறது சாஸ்திரம்.இதிகாசங்கள் குறித்து குழந்தைகளுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. பஞ்ச பூதங்களால் ஆன மண் விளக்கால் தீபம் ஏற்றுங்கள்.இறைவனை தாயாக, தந்தையாக பார்ப்பது இந்து மதம். கணவன், மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே, இறைவன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.வாழ்க்கையின் தத்துவங்களை, ஆழ்வார்கள், நாயன்மார்கள், மற்றம் சித்தர்கள் உணர்த்தி சென்றுள்ளனர். யாரோ சிலரால், கோவில்களில் ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பனிக்கம்பட்டி சுப்பிரமணியர் கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது.