கண்டமங்கலம்: மோட்சகுளம் ஸ்ரீ வீரஅருள் ஆஞ்சநேய சுவாமி கோவில் அனுமன் ஜெயந்தியையொட்டி தெப்பல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 12:00 மணிவரை அனுமன் ஜெயந்தி விழாவும், தொடர்ந்து திருமஞ்சனம் செய்து வடமாலை சாற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ராதே கண்ணன் அஞ்சநேயர் தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.