பதிவு செய்த நாள்
28
டிச
2019
11:12
பரமக்குடி : மார்கழி மகா உற்ஸவத்தையொட்டி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்கோயிலில் பகல் பத்து உற்ஸவம்நேற்று துவங்கியது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவம்டிச., 17 ல்துவங்கியது. தினமும் காலை 5:00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஆண்டாள்அருளிய திருப்பாவை கோஷ்டியினரால் பாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியநிகழ்வாக நேற்று(டிச.27) காலை பகல் பத்து உற்ஸவம் துவங்கியது.தினமும்காலை 8:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் ஏகாந்த சேவையில்,தாயார் சந்நதி முன், ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளுவார்.
தொடர்ந்து தினமும் பெரியாழ்வார், ஆண்டாள், பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்ஆகிய 12 ஆழ்வார்களின் பாசுரங்கள் அர்ச்சகர்களால் வாசிக்கப்படும்.பகல்பத்து உற்ஸவத்தின் கடைசி நாளான ஜன.5 மாலை 5:00மணிக்குதிருமங்கையாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் மோகினி அவதாரத்தில் அலங்காரமாகி, திருநெடுந்தாண்டகம் வாசிக்கப்பட்டு வலம் வருவார். பின்,மாலை 6:00மணிக்கு நடை அடைக்கப்படும்.மறுநாள்(ஜன.6) காலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வஅலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று தொடங்கி பத்து நாட்கள் ராப்பத்து உற்ஸவம் நடக்கும். இதில் 8ம் நாளில் திருமங்கையாழ்வார் மோட்சம், 10ம் நாளில் நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடையும்.