ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் உத்தரகாண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா தரிசனம் செய்து, தனுஷ் கோடி கடல் அழகைகண்டு ரசித்தார்.
உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா நேற்று (டிசம்., 27ல்) ராமேஸ்வரம் வந்தார். வட மாநில பக்தர்கள் நடத்திய ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் தனுஷ் கோடியில் 1964ல் புயலில் சேதமடைந்த கட்டடங்களை பார்வையிட்டு, அரிச்சல் முனையில் கடல் அழகை கண்டு ரசித்தார்.
பின் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு சென்ற கவர்னருக்கு கோயில் உதவி ஆணையர் ஜெயா, பேஷ்கார் அண்ணாதுரை, கமலநாதன் ஆகியோர் வரவேற்றனர். பின் சுவாமி, அம்மன் சன்னதி யில் கவர்னர் தரிசனம் செய்தார். கோயில் சார்பில் கவர்னருக்கு பிரசாதம் வழங்கினர்.