பதிவு செய்த நாள்
02
ஜன
2020
01:01
திருவண்ணாமலை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை முதலே, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு சம்பந்த விநாயகர் மற்றும் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து நவக்கிரக சன்னதிகளில் நெய் தீபமேற்றி, கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் பக்தர்கள் குழு மற்றும் சிவனடியார்கள் கூட்டம் சார்பில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, ஒரு லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. திருவண்ணாமலையில், பூத நாராயணன் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட ஆலயங்களிலும்சிறப்பு பூஜை நடந்தது.