Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்பானையில் பொங்கல் வையுங்கள்! ... கொடைக்கானல் மலைப் பகுதியில் புத்தாண்டு வழிபாடு கொடைக்கானல் மலைப் பகுதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை, ராமேஸ்வரத்தில் ஆருத்ரா காப்பு கட்டுதல் துவக்கம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை, ராமேஸ்வரத்தில் ஆருத்ரா காப்பு கட்டுதல் துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2020
03:01

ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி நடராஜருக்கும், உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு 7:15 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஜன.9ல் காலை 8:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களையும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தன்று காலை 9:30 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேக,ஆராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின், இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தரும் நிகழ்ச்சியும், மறுநாள் ஜன.10 அதிகாலை 5:30 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கிறது.   ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

*ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.10ல் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று கோயிலில் சுவாமி நடராஜருக்கு கோயில் குருக்குள் காப்பு கட்டி மகா தீபாரதனை நடத்தினர். இன்று (ஜன.2) முதல் ஜன.9 வரை மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar