Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா: 17ம் தேதி தேரோட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் வட்டப்பாறையம்மன் உத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் வட்டப்பாறையம்மன் உத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
05:04

திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக துவங்கியது.


திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், வடக்கு முகம் நோக்கி, வட்டப்பாறையம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவ ஏழு நாள் விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சன்னதி மைய மண்டபத்தில், கலசம் நிர்மாணிக்கப்பட்டு யாகம் வளக்கப்பட்டது. மஹா பூர்ணாஹூதி நிறைவுற்று கலசம் புறப்பாடாகின. கொடிமரம் அருகே, வெள்ளை சம்பங்கி மலர் மாலை அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். கொடிமரத்திற்கு, பால், பன்னீர், இளநீர், மஞ்சள் நீர் மற்றும் நிறைவாக கலசநீரால் அபிஷேகம் நடந்தது. பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, மேள தாளங்கள், வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது. அப்போது, கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘ஓம் சக்தி, பராசக்தி’ என, முழங்கினர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் விமானத்தில் எழுந்தருளிய நிலையில், வட்டப்பாறையம்மன் மாடவீதி உற்சவம் நடந்தது. இதில், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை உட்பட பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில், உற்வச தாயார், சாமந்தி பூ மலர் மாலை அணிந்து, ராஜாங்க விமானத்திலும், விருஷி பூ மாலை அணிந்து புஷ்ப விமானத்திலும், தவனம் மாலை அணிந்து, அஸ்தமானகிரி விமானத்திலும், செவ்வரளி பூ மாலை அணிந்து, சவுடால் விமானத்திலும், அரளி பூ மாலையில், புஷ்ப பல்லக்கிலும், கதம்பம் பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar