பதிவு செய்த நாள்
11
ஜன
2020
11:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வசந்த மண்டபத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஷோடசோபவுபச்சார தீபாராதனை, சுவாமி புறப்பாடு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 11:30 மணிக்கு கோவில் வளாகத்தில் ஊடல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.