புதுச்சேரி : நல்லாத்துார் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி ஏம்பலம் அடுத்த நல்லாத்துாரில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, போகி பண்டிகையான நேற்று காலை 10:00 மணியளவில், பெருமாள் தாயார் திருமணக் கோலத்தில் சன்னதி புறப்பாடும், அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவையும், மாலை மாற்றும் வைபவமும் நடந்தது.தொடர்ந்து, பெரியாழ்வாரின் சீதனமாக வஸ்திரங்கள், பழவகை வரிசை தட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டது. புண்ணியாகம், கங்கணதாரணம் ஆகியவற்றை தொடர்ந்து, பெருமாளின் கையில் திருமாங்கல்யத்தை வைத்து, திருவடி சேவித்து மாங்கல்ய தாரணம் நடந்தது.