தை அமாவாசையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல், சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சூலூர் சிவன் கோயில், கருமத்தம்பட்டி சென்னிஆண்டவர் கோயில், முத்து கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில், தை அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே, பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். கிராமக் கோவில்கள், குலதெய்வ கோவில்களில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடந்தது.