மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபி ?ஷகத்தின், ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை, 500க்கும் மேற்பட்ட பெண்கள் சாம்ராஜ்பேட்டையில் இருந்து, பால்குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு அம்மன் வீதி உலா, இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தினர் செய்தனர். மாதந்தோறும், அமாவாசை நாளில் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்வர். இன்று தை அமாவாசயை முன்னிட்டு, அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது.