சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவான் கோவிலில் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2020 11:01
கிருஷ்ணகிரி: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சனிபகவான் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் சனி பகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு யாகம் நடத்தப்பட்டது. பின்னர், சனி பகவானின் குருவான, காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கறுப்பு துணியால் கட்டிய எள்ளை அக்னியில் இட்டும், எள்ளை படியில் அளந்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். இதனால், இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கறுப்பு துணியில் தேங்காயை கோவிலில் கட்டி வைத்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், சனிப்பெயர்ச்சி தை மாத அமாவாசை நாளன்று வந்துள்ளதால், மிகவும் அரிதானது என்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.