பதிவு செய்த நாள்
25
ஜன
2020
11:01
கிருஷ்ணகிரி: வீரஆஞ்சநேயர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, 1,008 பெண்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், திம்மசந்திரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், சீதாராம கல்யாண உற்சவம், 48 நாட்கள் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜை, கலச ஆராதனை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ராம அவதார ஹோமம் ஆகியவை நடந்தது. 9:00 மணிக்கு, 1,008 பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலை, 4:30 மணிக்கு சீதாராம கல்யாண உற்சவம், ஆராதனை, அக்னி பிரதிஷ்டை, காசியாத்திரை, மஹாமங்களாரத்தி நடந்தது. வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., முருகன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா முரளி ஞானசேகரன், திம்மசந்திரம் ஊர்பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் செய்திருந்தனர்.