திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிவில் தை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டு பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலமான மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தை மாத முதல் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.அதனையொட்டி, நந்தி பகவானுக்கு பால், நெய், இளநீர், உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் நடத்தி, மகா தீபராதானை நடந்தது. தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் சுவாமி வலம் வந்தது