* போற்றுதலையோ, துாற்றுதலையோ செவி சாய்க்காமல் இருப்பதே அமைதிக்கான வழி. * நெருப்பின்றி எப்படி சமையல் இல்லையோ அது போல ஞானம் இன்றி மோட்சம் இல்லை. * ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளைக் காண முடியும். * தர்மம் செய்வதால் மனம் துாய்மை பெறுவதோடு புண்ணியமும் சேரும். * செல்வம் என்பது பணம் சேர்ப்பதல்ல. எதிலும் மனநிறைவு காண்பதே. * உதட்டில் வெளிப்படாமல் உள்ளத்தில் வெளிப்படுவதே உண்மையான சிரிப்பு. * கெட்டதைச் செய்பவன் பார்வையற்றவன்; நல்லதை கேட்காதவன் கேட்கும் திறன் இல்லாதவன். * இனிமையாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தாதவன் பேசத் தகுதியில்லாதவன். * பேச்சை குறைப்பது, உடைமையைத் துறப்பதே துறவுக்கு அடிப்படை. * பொருள் மீது பற்று குறைய நல்லோருடன் பழக வேண்டும். * எப்போதும் சந்தோஷமாக இருப்பவனே முமுமையான மனிதன். * ஒளியின்றி எப்படி காண முடியாதோ, அது போல ஆராய்ச்சி இன்றி அறிவைப் பெற முடியாது. * மனிதனின் வாழ்வு, இறப்பு, வறுமை, செழுமை எல்லாம் கடவுளின் செயல். * பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் தோற்றமே என்னும் தெளிவு வேண்டும். * கருமித்தனம் இருப்பவனிடத்தில் எல்லா நற்குணங்களும் அழியும். * ஒருவனின் ஆணவம் பெரும்தீமைகளை விளைவிக்கும். * மற்றவரிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே நாம் காண வேண்டும். * சாஸ்திரங்கள் எல்லையில்லாதவை. அவற்றில் பல அதிசயங்கள் பொதிந்துள்ளன. * தன்னலம் கருதாமல் தானம் செய்பவர்கள் உலகில் மிக குறைவு. - வழி காட்டுகிறார் ஆதிசங்கரர்