திருவாசகம் பாடிய மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி சில தலங்களில் உள்ளன. 1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில். இங்கு சிவபெருமானே குருநாதராக தோன்றி மாணிக்கவாசகருக்கு உபதேசித்தார். 2. மதுரை மாவட்டம் திருவாதவூர் மறைநாதசுவாமி கோயில். மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது. 3. தேனி மாவட்டம் சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயில். இங்கு சிவன், அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர். 4. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில். இங்கு சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்தார். 5. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில். மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் திருவாசகத்தை எழுதிய தலம் இது. மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.