Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் ‛காத்திருப்பு’ அறைகள் ... சித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பன் பூஜை சித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

16 மார்
2020
12:03

காரைக்குடி:காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்தி செலுத்தினர்.

இக்கோயிலில் மார்ச் 10 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் மாசி பங்குனி திருவிழா துவங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழா துவங்கிய நாள் முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதற்காக நேற்று அதிகாலை 3:00 மணிக்கெல்லாம் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகர் முழுவதும் சுற்றி வந்து, கோயிலை அடைந்தனர்.இதற்காக முத்தாலம்மன் கோயில் குளத்தில் நீராடி அங்கிருந்து பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தியும் நேர்த்திக்கடனை துவக்கினர்.

அங்கிருந்து மகர்நோன்பு பொட்டல், முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 17 ல் இரவு 7:00 மணிக்கு கரகம் எடுத்தலல், காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுக்கப்படும். அன்று மாலை 4:00 மணிக்கு கோயில் கரகம், மதுக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 19 ல் அம்மன் திருவீதி உலா வருவார். மார்ச் 20 ல் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். காரைக்குடி டி.எஸ்.பி., அருண் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar