ஒருமுறை வியாபாரிகளைச் சந்தித்த நாயகம், ‘‘வணிகத்தில் ஈடுபடும் நீங்கள், சரக்குகளை விற்பதற்காக வீண்பேச்சுகளையும், பொய்யாக சத்தியம் செய்வதற்கும் அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே, வியாபாரத்தில் நேர்மையையும், தர்மத்தையும் கலந்து விடுங்கள். கொள்முதல் செய்வதிலும், விற்பதிலும், கடனை பெறுவதிலும் மென்மையை பின்பற்றுங்கள். கைகளால் கடுமையாக உழைப்பதும், பொய் பேசாமலும் நடத்தும் வியாபாரத்தில் கிடைக்கும் லாபமே சிறந்த சம்பாத்தியம். நாணயத்துடன் வாழ்ந்த வியாபாரிகள் மறுமை நாளில் உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்த நல்லவர்களுடன் இருக்கும் பேறு பெறுவர்’’ என நற்கருத்துகளை எடுத்துரைத்தார்.