Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நலம் பல தந்து நல்வழிகாட்டும் ... கோவிலுக்கு மாவிளக்கு எடுத்த நன்றியுள்ள ஜீவன்: பம்பை முழங்க பவனி! கோவிலுக்கு மாவிளக்கு எடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கப் பல்லக்கில் கண்டாங்கி பட்டு உடுத்தி வேல்கம்புடன் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மே
2012
10:05

அழகர்கோவில்: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர். நாளை காலை 5.45 மணிக்கு வைகையாற்றில் இறங்குகிறார். அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2ல் துவங்கி நடக்கிறது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை தோளுக்கினியாள் அலங்காரத்தில் புறப்பட்டு கோயிலை வலம் வந்தார். மாலை 5.30 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், மேள, தாளம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர். கோயில் ராஜகோபுரத்தில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமி, சன்னதி எதிரில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வையாழியானவுடன், கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும், தீப ஆராதனையும் நடந்தது. பின் கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். கூடியிருந்த பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க அழகரை தரிசித்தனர். இன்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு எதிர் சேவை நடக்கிறது. காலை புதூரிலும், மாலை அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடக்கிறது. மே 6 அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டு, வெட்டிவேர் சப்பரத்திலும், 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.

வைகை ஆற்றில் இறங்குகிறார்: நாளை காலை 5.45க்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அழகர், காலை 10 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைகிறார்.

கண்கவரும் வாண வேடிக்கை: அழகர் புறப்படும் போது மேள, தாளம் இசைப்படுவதுடன், வெடிகள் வெடிப்பது வழக்கம். வெடி வைப்பவர்களுக்கும், பக்தர்களுக்கும் இதனால் பாதுகாப்பில்லை என பலர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாண வேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் ஒரு மணி நேரம் நடந்த கண்கவரும் வாண வேடிக்கையால் பக்தர்கள், குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar