Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனசாட்சியை மதிப்போம் சிவசம்போ மகாதேவா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேடி வந்த கடுக்கன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
05:03


திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சி மகாசுவாமிகளை வேத பண்டிதர்கள் சிலர் தரிசிக்க வந்தனர். இளைஞன் ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் முகம் சற்று வாட்டமாக இருந்தது.   
அனைவரும் வேதங்களைப் பாராயணம் செய்ய சுவாமிகள் ஆர்வமுடன் கேட்டார். ஆளுக்கொரு ஆரஞ்சுப் பழம், குங்குமப் பிரசாதமும் கொடுத்து ஆசியளித்தார். அவர்கள் விடைபெற்ற போது இளைஞனிடம் ‘ நீ மட்டும் இங்கேயிரு. பிறகு போகலாம்!’ என தங்கச் செய்தார்.   
சிறிது நேரத்தில் பக்தர் ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார்.  சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்த அவர், ‘சுவாமி! காதுவலியால் நான் மிகவும் சிரமப்பட்டேன். அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மருந்திலேயே குணம் பெற வேண்டும் என்றும், விருப்பம் நிறைவேறினால் கடுக்கன்களை தங்களிடம் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதித்த போது மருந்திலேயே குணப்படுத்தலாம் என மருத்துவரும் தெரிவித்தார். அதன்படி மருந்து சாப்பிட்டதில் காதுவலி முற்றிலும் நீங்கியது. கடுக்கன்களை தங்களிடம் சமர்ப்பிக்க இப்போது வந்திருக்கிறேன். ஏற்று அருள்புரிய வேண்டும்!’’ என்றார்.
மூங்கில் தட்டில் கடுக்கன்களை வைத்து மீண்டும் வணங்கி விடைபெற்றார் பக்தர். இளைஞரை அருகில் வரும்படி சைகை காட்டினார் சுவாமிகள்.
‘‘ உன்னோடு வந்த வேத பண்டிதர்கள் அனைவரும் கடுக்கன் அணிந்துள்ளனர். நீ மட்டும் வேப்பங்குச்சியை காதில் செருகி இருக்கிறாய். இதை எண்ணி மன வாட்டத்துடன் இருக்கிறாயே? உன் ஆதங்கம் அம்பிகையின் செவியை எட்டி விட்டது! அவளும் செவி சாய்த்து விட்டாள். இதோ பார்! கடுக்கன் உன்னைத் தேடி வந்து விட்டது. இதை நீயே வைத்துக் கொள். நன்கு சுத்தம் செய்து அணிந்து கொள். நன்றாகக் கேட்டு அனுபவிக்கும் படியாக தெளிவாக (ஸ்பஷ்டமாக) வேதங்களை ஜபிப்பதால்,  உன் காதுகளைக் கடுக்கன்களால் அம்பிகை அலங்கரிக்க விரும்புகிறாள். இனி உன் வேதனை தீர்ந்ததல்லவா?’’ என்றார் சுவாமிகள்.   
 அடுத்தவரின் மனஓட்டத்தை அறியும் சக்தி பெற்றிருப்பதோடு, அதை நிறைவேற்றும் விதத்தில்  கடுக்கனையும் வரவழைத்து விட்டாரே என இளைஞர் பரவசம் கொண்டார். சுவாமிகளிடம் கடுக்கன்களை பெற்று மகிழ்ந்தார்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar