சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மாங்காய் சாதம்என்ன தேவை:அரிசி – 100 கிராம்இனிப்பு மாங்காய்த் துருவல் – 6 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன்மிளகாய் வற்றல் – 4கடுகு – 1/4 ஸ்பூன்முந்திரிப் பருப்பு – 8கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்வெந்தயம் – 1/8 ஸ்பூன்பெருங்காயம் – தேவைக்கேற்பமஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்கடுகு – 1/4 ஸ்பூன்நெய் – 2 ஸ்பூன்நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்உப்ப – தேவைக்கேற்பஎப்படி செய்வது:சாதம் குழையாமல் பக்குவமாக வேக வைத்து களிம்பு ஏறாத பாத்திரத்தில் வைக்கவும். மாங்காய், தேங்காய், மிளகாய் வற்றல் மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கடுகைச் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், மஞ்சள், பெருங்காயத்தை வறுத்து வைக்கவும். கடலைப் பருப்பை பொன்னிறமாகவும், கடுகை தாளித்தும் எடுக்கவும். பெருங்காயம், வெந்தயம், மஞ்சளுடன் உப்பையும் சேர்த்து பொடி செய்யவும். அரைத்த மாங்காய், முந்திரிபருப்பு, கடலைப்பருப்பு, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம், உப்புப்பொடி, எண்ணெய்யை சாதத்துடன் கிளறினால் சுவையான மாங்காய் சாதம் ரெடியாகி விடும்.