Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேர் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ... வடசென்னை வேங்கடேச பெருமாள் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்! வடசென்னை வேங்கடேச பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்தாண்டும் அழகரை ஆட்டம் காண வைத்த சீர்பாதங்கள்: பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மே
2012
10:05

மதுரை: மதுரை வைகையாறு தேனூர் மண்டபத்தில், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து புறப்பட்ட அழகரை, சீர்பாதங்கள் (சுவாமியை தூக்கிச் செல்பவர்கள்) அவசரப்பட்டு தூக்கியதில் கவிழும் நிலை ஏற்பட்டது. கடந்தாண்டை போல் இந்தாண்டும் நடந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியுற்றனர். பக்தர்களுக்கும், சீர்பாதங்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று முன் தினம் வைகையாற்றில் தங்ககுதிரை வாகனத்தில் இறங்கிய அழகர், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு சென்றார். நேற்று காலை சேஷ வாகனத்தில் வைகையாற்றின் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்துவிட்டு, கருடவாகனத்தில் அழகர் புறப்பட தயாரானார். பல்லக்கில் அம்பி பட்டர் நின்றுக்கொண்டிருக்க, சீர்பாதங்கள் அவசரப்பட்டு ஒருபுறம் தூக்க, கருடவாகனத்துடன் அழகரும், பட்டரும் கவிழும் நிலை ஏற்பட்டது. சுதாரித்த சீர்பாதங்கள், மறுபுறம் தூக்குவதை நிறுத்த, கவிழ்வது தடுக்கப்பட்டது. பட்டருக்கோ, வாகனத்திற்கோ பாதிப்பு ஏற்படவில்லை. கடந்தாண்டு, இதேபோல் அவசரப்பட்டு தூக்க, அழகரும், பட்டரும் கவிழ்ந்தது குறிப்பிட்டதக்கது. நேற்று நடந்த இந்நிகழ்வால் பக்தர்கள் அதிர்ச்சியுற்றனர். தேனூர் மண்டபத்தைச் சேர்ந்த ஒருவர், சீர்பாதங்களை தாக்க, அவர்கள் கோபித்துக் கொண்டு மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதனால், "நாங்கள் அழகரை தூக்கிச் செல்கிறோம் என ஆவேசத்துடன் பக்தர்கள் கூறினர். அவர்களை கோயில் ஊழியர்களும், போலீசாரும் தடுத்தனர். பின், சீர்பாதங்களை சமரசம் செய்து, மண்டபத்திற்குள் அழைத்து வந்தபோது, அவர்களுக்கும், பக்தர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் சமரசம் செய்ததை தொடர்ந்து, அம்பி பட்டர், 1,2,3 என்றுக்கூற, ஒரே நேரத்தில் இருபுறமும், கருடவாகனத்தில் அழகரை சீர்பாதங்கள் தூக்கிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar