Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோவில் பிரசாத கடை ரூ.11 லட்சத்திற்கு ... திண்டமங்கலம் விநாயகர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா மே 15 கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
10:05

ராசிபுரம்: எல்லை மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, மே 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ராசிபுரம்-புதுப்பாளையம் சாலையில், எல்லை மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, மே14ம் தேதி, கிராம சாந்தியுடன் துவங்குகிறது. மே 15ம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி ஊர்வலம், இரவு 8 மணிக்கு பூந்தட்டுகள் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக செல்கின்றனர். இரவு 10 மணிக்கு காப்புகட்டி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.மே 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதியம் 2 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மே 21ம் தேதி இரவு 10 மணிக்கு பூவோடு பற்ற வைத்தலும், மே 22ம் தேதி காலை 7 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.மே 23ம் தேதி காலை 7 மணிக்கு சக்தி அழைப்பு, 11 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு அக்னி குண்டம் பற்றவைக்கப்படுகிறது. மே 24ம் தேதி காலை 6 மணிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்,பெண் பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி, அம்மனுக்கு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மே 25ம் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா வந்து சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழு உள்பட பல்வேறு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar