Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏர்வாடி தர்காவில் பச்சைத் துண்டு ... உலகில் பிறந்த எல்லாரும் உயர்ந்தவரே என்பதை உணர்திய தத்தாத்ரேயர் ஜெயந்தி! உலகில் பிறந்த எல்லாரும் உயர்ந்தவரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐம்பொன் சுவாமி சிலைகள் பெருமாள் கோவிலில் கொள்ளை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2012
11:05

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கடலங்குடி வரதராஜ பெருமாள் @காவிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கடலங்குடியில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவில் சிலைகளுடன், பிறகோவில் சிலைகளும் சேர்த்து, 31 ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பின்றி தனி அறையில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம், கோவிலின் அர்ச்சகர்களான வீரராகவ பட்டாச்சாரியாரும், அவரது உதவியாளர் சுந்தர்ராஜனும் பூஜைகளை முடித்து விட்டு, கோவில் கதவை மூடிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை, வீரராகவ பட்டாச்சாரியார் கோவில் கதவை திறந்து பார்த்த போது, தனி அறை கதவுகள் உடைக்கப்பட்டு புத்தமங்கலம், கல்யாணசோழபுரம், நாராயணமங்கலம், ஆத்தூர் கோவில்களுக்கு சொந்தமான 2.5 அடி உயரமுள்ள லட்சுமி நாராயண பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவி, ருக்மணி, சத்தியபாமா, வரதராஜ பெருமாள் ஆகிய ஏழு சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலின் பேரில், மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை போன சிலைகள் குறித்து துப்பு துலக்க, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar