Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ... ராமர்பாதம் கோயிலுக்கு ரூ.2.60 கோடி ராமர்பாதம் கோயிலுக்கு ரூ.2.60 கோடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைநீர் சேமிப்பு மையமாகும் கோவில் குளம்
எழுத்தின் அளவு:
மழைநீர் சேமிப்பு மையமாகும் கோவில் குளம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
12:07

 ஆவடி, நம் நாளிதழின் விழிப்புணர்வு கட்டுரைகளால், ஆவடி அருகே உள்ள கோவில் குளம், இரண்டாவது முறையாக, துார் வாரி ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.சென்னை, ஆவடி, கோவில்பதாகையில், பழமையான சுந்தரராஜப் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவி லின் முன்புறம், 60 சென்ட் பரப்பில், திருக்குளம் உள்ளது. இது, துார் வாரப்படாமல், உரிய பராமரிப்பின்றி காணப்பட்டது.

துார்ந்து காணப்பட்ட, பல நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, அதன் முக்கியத்துவம் குறித்து, நம் நாளிதழில், களமிறங்குவோம் நமக்கு நாமே என்ற தலைப்பில், கடந்தாண்டு, தொடர் கட்டுரைகள் வெளியாகின.இதன் எதிரொலியாக, இந்த குளத்தை துார் வார, மா.பா.அறக்கட்டளை சார்பில், 44 லட்சம் ரூபாயை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.மேலும், அரசு சார்பில், 56 லட்சம் ரூபாய் உட்பட, 1 கோடி ரூபாய் செலவில், 5 அடி ஆழத்திற்கு, குளம் துார் வாரப்பட்டது.இதையடுத்து, வடகிழக்கு பருவமழை பெய்தும், குளத்தில் போதிய நீர் தேங்கவில்லை.இந்நிலையில், குளத்தை, மேலும், 10 அடி ஆழத்திற்கு துார் வாரி, 30 அடி ஆழம் உடைய குளமாக மாற்ற, கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, துார் வாரும் பணி, தீவிரமாக நடக்கிறது. அறநிலையத் துறை சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜூனில் துார் வாரும் பணிகள் துவங்கின.கொரோனா பரவல் காரணமாக, பணிகளில் தடை ஏற்பட்டது. இருப்பினும், குறைந்த தொழிலாளர்களுடன் பணிகள் நடந்து வருகின்றன.குளம் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், இந்தாண்டு, அதிகப்படியான மழைநீரை தேக்கி வைக்க முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதியில் நீர்மட்டம் உயர முக்கிய நீராதாரமாக, இந்த குளம் விளங்கும் எனவும், கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar